மகளை அரிவாள் மனையால் தாக்கிய தாய் (வீடியோ)

124834பார்த்தது
உ.பி.யின் குஷிநகர் மாவட்டத்தில் உள்ள குபெர்ஸ்தான் காவல் நிலையத்துக்கு உட்பட்ட செம்ரா லக்ஷ்மிபூர் கிராமத்தில் கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதுகுறித்த வீடியோவில் பெண் ஒருவர் குழந்தையை கண்மூடித்தனமாக தாக்குவது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பெண்ணை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். தத்தெடுத்து வளர்ந்துவரும் அந்த சிறுமியிடம் பெண் ஒருவர் கொடூரமாக நடந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி கடுமையாக தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். மேலும் குழந்தையின் கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி, சிறுமியின் கையை பிடித்து முறுக்கிய சம்பவம் காண்போரை அதிர்ச்சியடையவைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி