லாரி ஏறி தாய் மற்றும் மகள் உயிரிழப்பு (வீடியோ)

81பார்த்தது
உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரியில் உள்ள கர்ஹால் சாலையில் இன்று (மே 15) நடந்த விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தம்பதி அவர்களது குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அவர்கள் பின்னே வந்த லாரி ஒன்று அவர்களை இடித்துவிட்டு மேலே ஏறி சென்றது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த போலீசார் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி