தரிசனம் செய்யாமல் திரும்பிய 650க்கும் மேற்பட்ட பக்தர்கள்

51பார்த்தது
தரிசனம் செய்யாமல் திரும்பிய 650க்கும் மேற்பட்ட பக்தர்கள்
பெயர் பதிவு செய்யாமல் சார்தாம் யாத்திரைக்கு சென்ற பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள நான்கு புனிதத் தலங்களில் ஒன்றான பத்ரிநாத் கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு.

இந்த நிலையில், சார்தாம் யாத்திரை தற்போது நடக்கும் சூழலில், பத்ரிநாத்துக்கு 650க்கும் மேற்பட்ட பக்தர்கள் கட்டாய பதிவு விதியை பின்பற்றாமல் செல்வதாக சாமோலி எஸ்எஸ்பி அலுவலகம் செவ்வாய்கிழமை தெரிவித்தது.

அவர்கள் அனைவரும் கவுச்சார் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். பெயர்களை பதிவு செய்யாமல் யாத்திரைக்கு வர வேண்டாம் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி