தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனம் செய்துவிட்டீர்களா? என சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கேள்வியெழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, "நேற்று முன்தினம் வரையில் இந்த ஆட்சியினுடைய செயல்பாடுகளை மனதார புகழ்ந்தவர்தான் அவர். அவருடைய நெருடல் என்னவென்று புரியவில்லை. தெரிந்தால் அதற்கான பரிகாரத்தை காண முடியும். தமிழகத்தில் 1000க்கும் அதிகமான போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது" என கூறியுள்ளார்.