விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார் மேரி கோம்

83பார்த்தது
விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார் மேரி கோம்
குத்துச்சண்டையில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் மேரி கோம், ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் விதி காரணமாக அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 40 வயது வரை மட்டுமே ஆடவர் மற்றும் மகளிர் குத்துச்சண்டையில் விளையாட முடியும். வயது வரம்பு முடிந்துவிட்டதால் என்னால் எந்த போட்டியிலும் கலந்து கொள்ள முடியாது. நான் விளையாட விரும்புகிறேன். ஆனால், வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் நான் ஓய்வு பெறுகிறேன் என அவர் அறிவித்தார்.

தொடர்புடைய செய்தி