துணி துவைப்பது போல் நாயை துவைத்த கொடூரன் (வீடியோ)

13581பார்த்தது
உ.பி.யில் உள்ள பாக்பாத் அருகே பராவுத் நகரில், ஒரு நபர் தெரு நாயை அதன் இரண்டு கால்களைப் பிடித்து துணி துவைப்பது போல சாலையில் வீசி பலமுறை அடித்தார். உயிருக்கு போராடிய நாய் கடைசியில் உயிரிழந்தது. நாயை மீட்க பல நாய்கள் அருகில் நின்று கத்திக்கொண்டிருந்தன. ஆனால் விடாமல் அந்த நபர் நாய் மீது கொடூர தாக்குதல் நடத்தினார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, அந்த நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என நெட்டிசன்களும், விலங்குகள் நல ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி