கர்நாடகா: பெங்களூருவில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவியும், மாமியாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சனிக்கிழமையன்று, ரியல் எஸ்டேட் தொழிலதிபரான ராமநகரா மாவட்டத்தில் லோக்நாத் சிங்கி (37) வடக்கு பெங்களூரில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக அவரது மனைவி யஷ்வானி சிங் (19) மற்றும் அவரது தாயார் ஹேமா பாய் (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். லோக்நாத்தின் சித்ரவதை மற்றும் மோசமான நடத்தையே கொலைக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர். மாமியாரை படுக்கைக்கு அழைத்தும் டார்ச்சர் செய்துள்ளார்.