சாலை தடுப்பில் மோதியவர் பலி.

65பார்த்தது
சாலை தடுப்பில் மோதியவர் பலி.
மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே இரு சக்கர வாகன விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம்,
பேரையூர் துர்கா நகரைச் சேர்ந்த இருளப்பன் மகன் கோவிந்தராஜ் (45) என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், இருளப்பன் இரு சக்கர வாகனத்தில் சாப்டூர்-பேரையூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அத்திப்பட்டி சந்திப்பு அருகே சென்ற போது, இவரது இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த கோவிந்த ராஜ் பேரையூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து சாப்டூர் போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி