மத்திய அரசு வீடுகளுக்கு உபயோகிக்கப்படும் கேஸ் சிலிண்டர் விலையை 50 ரூபாய் உயர்த்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் கேஸ் சிலிண்டர் விலையை திரும்பபெற கோரியும் சிலிண்டர் விலையை உயர்த்தி ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்க வைக்கும் மத்திய அரசை கண்டித்தும் மதுரை மாநகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சிலிண்டர் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி நூதன முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் , சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.