கட்டிலில் இருந்து கீழே விழுந்தவர் உயிரிழப்பு.

54பார்த்தது
கட்டிலில் இருந்து கீழே விழுந்தவர் உயிரிழப்பு.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கீழே விழுந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்,
கொண்டையம்பட்டி காமாட்சி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ராமலிங்கம் மகன் சுரேஷ் (40) என்பவர் மதுவுக்கு அடிமையானவர். இவர் நேற்று முன்தினம் காலை கட்டிலிருந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி சுமதி அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி