கலிங்கப்பட்டியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாக்களிப்பு

64பார்த்தது
கலிங்கப்பட்டியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாக்களிப்பு
தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டியில் உள்ள வாக்குச் சாவடியில் இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்காளர்களுடன் வரிசையில் காத்திருந்து வாக்களித்தார். இதில் ஏராளமான பொதுமக்களும் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று வாக்கு செலுத்தி வருகின்றனர். தென்காசி தொகுதியில் திமுக சார்பில் ராணி ஸ்ரீகுமார் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, பாஜக கூட்டணி சார்பில் தமமுக தலைவர் ஜான் பாண்டியன், நாம் தமிழர் கட்சி சார்பில் இசை மதிவாணன் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி