மின்சார தேவை 44 கோடி யூனிட் அதிகரிப்பு

83பார்த்தது
மின்சார தேவை 44 கோடி யூனிட் அதிகரிப்பு
கோடை காலம் என்பதால் மின்சார பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு மின்சார தேவை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு அதிகபட்ச மின்சார நுகர்வானது 42 கோடி யூனிட்டாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு 44 கோடி யூனிட் மின்சார நுகர்வு இருப்பதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் இன்னும் கூடுதல் மின்சார தேவை ஏற்படலாம் என மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.