பைஜூஸ் செயலியின் உரிமையாளருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ்

77பார்த்தது
பைஜூஸ் செயலியின் உரிமையாளருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ்
பைஜூஸ் செயலியின் உரிமையாளரான பைஜு ரவீந்திரன் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமலாக்த்துறை லுக்அவுட் நோட்டீஸை வெளியிட்டுள்ளது. கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் பைஜூஸ் நிறுவனம், அன்னிய செலாவணி விதிகளை மீறியது உள்ளிட்ட பல வழக்குகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில், அவர் நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்கவே லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ED-யின் அதிகாரப்பூர்வ விளக்கம். பைஜு ரவீந்திரனை நிறுவனத்தில் இருந்து நீக்க மார்க் ஜுக்கர்பெர்க் உள்ளிட்ட முதலீட்டாளர்கள் நாளை அசாதாரண பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கிடையில், பைஜு ரவீந்திரனுக்கு எதிராக ED லுக்அவுட் நோட்டீஸையும் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி