“நீட் மோசடி குறித்து குரல் எழுப்புவோம்” - கனிமொழி எம்பி

61பார்த்தது
“நீட் மோசடி குறித்து குரல் எழுப்புவோம்” - கனிமொழி எம்பி
திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்பி இன்று பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதன் தீர்மானம் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஒன்றிய அரசு கண்டுக் கொள்ளாமல் இருந்தது. ஆனால், தற்போது நீட் மோசடி அம்பலமான நிலையில் நாடே இதுகுறித்து விழித்துக் கொண்டுள்ளது. இந்த பிரச்சனையை நாடாளுமன்ற இரண்டு அவைகளிலும் நாளை முக்கிய பிரச்சனையாக எழுப்ப இருக்கிறோம்” என்றார்.

தொடர்புடைய செய்தி