முதல்வருக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில்

80பார்த்தது
முதல்வருக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்யக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலதித்துள்ளார். இதுகுறித்து அவர், "தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு, மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளை களைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்திய மீனவர்களின் பாதுகாப்பு, நலனுக்காக அதீத முன்னுரிமை வழங்குவோம்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி