தாயின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய மகன்

52பார்த்தது
தாயின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய மகன்
ஊத்தங்கரை அடுத்த வளத்தானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி. இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது மனைவி முனியம்மாள்(45). இவருக்கு ஒரு மகன் உள்ளார், புதன்கிழமை காலை முனியம்மாள் காரப்பட்டு அடுத்த சின்னசாமி நகர் ஏரி அருகில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று வீடு திரும்பும்போது, எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

டனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்து, மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த மருத்துவர் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக கூறியதை தொடர்ந்து, அவரது மகன் நேதாஜி(19). தனது தாயின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக கூறினார். தொடர்ந்து அவரது
உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.

தொடர்புடைய செய்தி