கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு

63பார்த்தது
கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை மற்றும் சிகிச்சையைத் தீர்மானிக்க அமைக்கப்பட்ட மருத்துவக் குழுவின் நடவடிக்கைகளை தனது மனைவி காணொலி மூலம் காண அனுமதிக்குமாறு கெஜ்ரிவால் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளை (ஜூன் 15) ஒத்திவைத்தார். இதையடுத்து, கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 19ம் தேதிக்கு டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தொடர்புடைய செய்தி