பி.எஃப். கொரோனா கால சலுகை முடிந்தது - EPFO அறிவிப்பு

73பார்த்தது
பி.எஃப். கொரோனா கால சலுகை முடிந்தது - EPFO அறிவிப்பு
கொரோனா காலத்தில் நிபந்தனையின்றி பிஎஃப் பணத்தை முன் பணமாக எடுப்பதற்கான சில சிறப்பு சலுகைகளை EPFO நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த சலுகைகள் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கின் போது ஊழியர்கள் தங்களது பிஎஃப் கணக்கிலிருந்து, எந்தவித நிபந்தனையுமின்றி பணம் எடுக்கக்கூடிய வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. தற்போது அந்த சலுகைகள் முடிவுக்கு வந்து, திருமணம், உயர்கல்வி, வீடு கட்டுமானம் போன்ற தேவைகளுக்கு மட்டுமே முன்பணம் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி