அத்துமீறி நடந்த காவல் அதிகாரி.. கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

76பார்த்தது
அத்துமீறி நடந்த காவல் அதிகாரி.. கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் கைது செய்து நேற்று(மார்ச்23) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில் காவல் உதவி ஆணையர் ஏ.கே.சிங் தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகவும், எனவே, அவரை மாற்ற வேண்டும் என்றும் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார். தனது கழுத்தைப் பிடித்து இறுக்கியதாக ஏ.கே.சிங் மீது ஏற்கெனவே, டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி