“காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை தரம் உயர்த்த வேண்டும்”

75பார்த்தது
“காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை தரம் உயர்த்த வேண்டும்”
ஆர்.கே.நகர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எபினேசர் இன்று (ஜூன் 22) நடந்த சட்டப்பேரவையில் மீனவர்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்தார். அதில், “இலங்கை, பாகிஸ்தான் சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களுக்கு தினப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வரும் நிலையில், அதனை ரூ.500-ஆக உயர்த்தி வழங்க வேண்டும். மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லும் போது காணாமல் போனால் அவர்களை மீட்டு வர நவீன படகுகள் மற்றும் ஆம்புலன்ஸ் படகினை காசிமேட்டில் நிறுத்தி வைக்க வேண்டும். காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை சர்வதேச தரத்தில் தரம் உயர்த்தி தர வேண்டும்” என்றார்.

தொடர்புடைய செய்தி