ஆர். டி மலையில் பிரதோஷ வழிபாடு

84பார்த்தது
ஆர். டி மலையில் பிரதோஷ வழிபாடு
கரூர் மாவட்டம் தோகைமலை பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று பிரதோச வழிபாடுகள் நிகழ்ச்சி நடந்தது. இதன் ஒரு பகுதியாக ஆர். டி. மலை விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரிய நாயகி அம்பாள் திருக்கோவிலில் பிரதோசம் வழிபாடுகள் நடந்தது. முன்னதாக கோவிலில் உள்ள விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகிஅம்பாலுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிசேகம் செய்தனர். பின்னர் கோவில் எதிரே உள்ள நந்தீஸ்வரருக்கு 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிசேகம் செய்தனர்.
இதில் பருவமழை வேண்டுதல். விவசாயம் செழிக்க வேண்டும் மற்றும் உலகமக்கள் அமைதிக்காகவும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து எள், தயிர், எழும்பிச்சை, புளிசாதங்கள், சுண்டல் மற்றும் விபூதி போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த பிரதோசம் நிகழ்ச்சியில் கோவில் அர்ச்சகர் கந்தசுப்பிரமணிய சிவாச்சாரியார் மற்றும் வேதரத்தினசிவம் குருக்கள் ஆகியோர் பூஜைகளை வழி நடத்தினார்கள்.

தொடர்புடைய செய்தி