குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் தனது வாக்கினை பதிவு செய்தார்

76பார்த்தது
தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக 39 தொகுதிகளிலும் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி கரூர் மாவட்டம் குளித்தலை நகரப் பகுதிகளில் 24 வார்டுகளுக்கும் 6 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. குளித்தலை கடம்பர் கோவில் அரசு நடுநிலைப் பள்ளியில் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் முதல் ஆளாக வாக்களித்து ஜனநாயக கடமையாற்றினார்.

தொடர்புடைய செய்தி