நள்ளிரவில் வீடு புகுந்து செல்போன், பணம் திருட்டு

2244பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பெரியார்நகரில் உள்ள பாலாஜி நகரில் 2 வீடுகளில் நடந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதியில் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். நேற்று இரவு 9. 30 மணியிலிருந்து 11. 30 மணி வரை நகரப் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் குடியிருப்பு வாசிகள் பலரும் கடும் வெப்பத்தால் வீட்டின் கதவை திறந்த நிலையில் வைத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் குளித்தலை பைபாஸ் சாலையில் வந்த மர்ம நபர்கள் வாழைத்தோப்பு வழியாக மாடி வீட்டில் ஏறி கதவு திறந்த நிலையில் வீட்டின் கதவு அருகே தூங்கிக் கொண்டிருந்த தம்பதியினரை தாண்டி உள்ளே சென்று 2 செல்போன்கள், சிறிய மரப்பெட்டியில் வைத்திருந்த பணத்துடன் எடுத்துச் சென்று வாழைத்தோப்பு அருகே பெட்டியை உடைத்து பணத்தை எடுத்துக் கொண்டும், செல்போன் கவரை தூக்கி எறிந்து விட்டு சென்றுள்ளனர்.

அதேபோல் மற்றொரு கீழ் வீட்டில் கண்ணாடி ஜன்னலை உடைத்து உள்தாழ்ப்பாளை திறந்து உள்ளே சென்றுள்ளனர். உள்ளே பெட்ரூமில் தூங்கிக் கொண்டிருந்த அறையை விட்டு மற்ற இடங்களில் தேடிய நபர்கள் எதுவும் இல்லாததால் வெளியே சென்று விட்டனர். காலையில் எழுந்து பார்த்தபோதுதான் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததும் கதவு திறக்கப்பட்டு இருந்ததும் பார்த்து தம்பதியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி