அரசு குளத்தில் செம்மண் கடத்தல், பொதுமக்கள் சிறைபிடிப்பு

51பார்த்தது
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மாவத்தூர் பகுதியில் அரசு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளத்தில், 2 டிப்பர் லாரி, ஒரு ஜேசிபி இயந்திரம் கொண்டு செம்மண் திருடி கொண்டிருந்துள்ளனர். இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மண் திருட்டில் ஈடுபட்டவர்களை தடுத்து பாலவிடுதி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து அங்கு வந்த பாலவிடுதி போலீசார் வாகனங்களை காவல்நிலையத்திற்கு கொண்டு வரக்கூறி ஒரு லாரியை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர்.

அங்கிருந்த ஒரு லாரி, ஒரு ஜேசிபி இயந்திரத்துடன் ஓட்டுநர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து பாலவிடுதி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி