மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டம்

1538பார்த்தது
மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டம்
கரூர் மாவட்டம் தென்னிலை கூனம்பட்டி பகுதியில் உள்ள தென்னிலை ராஜா தோட்டத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் மூன்றாவது நாளாக ஈடுபட்டனர். கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் சாகும் வரை போராட்டம் என தெரிவித்தார்

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் தென்னிலை ராஜா பேட்டி அளித்த போது

ஆண்டி செட்டிபாளையம் முதல் தென்னிலை கரை தோட்டம் வரை 110 kv தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகத்தால் நிறுவப்பட்ட பாதை செல்லும் வழியில் உயர் மின் கோபுரத்துக்கான முழுமையான இழப்பீடு வழங்காமலும் உயர்மின் கோபுரம் அமைத்ததற்கு பிறகு உங்களுக்கான இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்திருந்தனர்

ஆனால் இதுவரை இழப்பீடு வழங்கவில்லை கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பாக பேச்சுவார்த்தையில் 15 நாட்களுக்குள் இழப்பீடு வழங்குவதாக கூறிய நிலையில் இதுவரை வழங்கவில்லை இழப்பீடு வழங்குவதற்காக போராடிய நபர்களுக்கு உள்நோக்கத்துடன் இழப்பீடு வழங்காமல் அதற்கான எந்த ஒரு அடிப்படை ஆரம்பிக்காமல் தாமதித்துள்ளனர் இன்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்

இந்த கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால் உண்ணாவிரதம் போராட்டம் தொடரும் என கூறினார்.

தொடர்புடைய செய்தி