நடிகர் சூர்யா பிறந்தநாள் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம்

64பார்த்தது
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா தனது 49வது பிறந்த நாளை வருகின்ற 23ஆம் தேதி கொண்டாட உள்ளார். சூர்யா "அகரம் பவுண்டேஷன்" என்ற பெயரில் ஏழை குழந்தைகளின் கல்விக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

மேலும், அவரது ரசிகர் மன்றம் சார்பாக ரசிகர்கள் மூலமாக நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். இந்த நிலையில் அவரது பிறந்த நாளை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவரது ரசிகர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இதையொட்டி கரூர் மாவட்ட சூர்யா ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைந்துள்ள ரத்த வங்கியில் 49 பேர் ரத்த தானம் செய்தனர்.

மேலும், சூர்யா பிறந்தநாளை ஒட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குதல், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளையும் நடத்த உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

பேட்டி: வசந்த் நடிகர் சூரிய ரசிகர் மன்றம் கரூர்.

தொடர்புடைய செய்தி