மீண்டும் வாக்குச்சீட்டு முறை விசிக ஆர்ப்பாட்டம்

53பார்த்தது
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கரூர் கடைவீதி தபால் அலுவலகம் முன்பு ஜனவரி 4ஆம் தேதி காலை 11 மணியளவில் இந்தியா முழுவதும் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த கோரி, கோரிக்கை ஆர்ப்பாட்டம் கரூர் மாநகர மாவட்ட செயலாளர் கராத்தே இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் புகழேந்தி கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேலிட பொறுப்பாளர்கள் வேலுசாமி மற்றும் கரூர் திருச்சி மண்டல செயலாளர் தமிழாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அக்னி இல அகரமுத்து, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் பொறியாளர் செந்தில் குமார், கரூர் திருச்சி மண்டல துணைச் செயலாளர் வழக்கறிஞர் ராஜா என்கிற மன்னன், மாவட்ட துணைச் செயலாளர்கள் வழக்கறிஞர் ராமச்சந்திரன், தனபால், கரூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் அவிநாசி தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் சுடர்வளவன், கரூர் நகர செயலாளர் முரளி , மாவட்ட மாணவரணி செயலாளர் தீபக்குமார் , புலி ஈழம் உதயா, தளபதி கெஜா, மகளிர் அணி கோமதி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி