மும்பையின் பாந்த்ரா பகுதியில் திங்கள்கிழமை ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஒரு ஆட்டோ ரிக்ஷா சாலையில் வேகமாகச் சென்றது. அப்போது சாலையை கடந்த இருவர் மீது ஆட்டோ மோதியது. ஆட்டோ மூடிய வேகத்தில் அவர்கள் சில அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்தார். காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.