கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிபட்டி கோட்டை பூமாதேவம் பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் ஏப்ரல் 16ஆம் தேதி மாலை 6 மணி அளவில் வாக்கு சேகரித்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் அரவக்குறிச்சி ஒன்றிய துணைத் தலைவர் ஊராட்சி தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
பிரச்சார கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் செந்தில்நாதன் இது மத்தியில் யார் பிரதமர் என்பதை முடிவு செய்வதற்கான தேர்தல் மாநில அரசுக்கான தேர்தல் அல்ல நீங்கள் மூன்றாவது முறையாக பாரத பிரதமர் மோடி ஆட்சி அமைக்க தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பேசினார்.