முன்னாள் அமைச்சர் மோடியை விமர்சித்தால் 8 ஆண்டுசிறை நிச்சயம்.

61பார்த்தது
முன்னாள் அமைச்சர் மோடியை விமர்சித்தால் 8 ஆண்டு சிறை நிச்சயம். ஜோதிமணி விளக்கம்.

கரூர் நாடாளுமன்ற தொகுதியில், இந்தியா கூட்டணி சார்பில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மீண்டும் போட்டியிடுகிறார்.

இன்று கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, புன்னம்சத்திரம், முன்னூர், அத்திப்பாளையம், குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ தலைமையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆரத்தி எடுத்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து அங்கு கூடியிருந்த பொதுமக்களிடையே பேசிய ஜோதிமணி, கை சின்னம் தான் வெற்றி பெறும். ராகுல் காந்தி தான் இந்தியாவின் பிரதமர் ஆவார் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், பிரதமர் மோடியை பற்றி விமர்சனம் செய்ய தயங்குவது ஏன்? எனவும், விமர்சனம் செய்தால் அடுத்த நாளே சிறையில் வைத்து விடுவார்கள். எட்டு ஆண்டு ஜெயிலில் தான் இருப்பார் எனவும், ஊழல் பண்றவங்க எல்லாம் வாயை பத்திரமா, ஒழுங்கு மரியாதையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி