கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அடுத்த பாறசாலை பரசுவைக்கல் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் நாயர் இவரது மனைவி குமாரி ஷீபா. நேற்று 8.15 மணியளவில் தனுவனச்சபுரம் ரயில் நிலையத்தில் கொச்சுவேளி - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. பயணிகளை இறக்கிய பின்னர், ரயில் புறப்பட தொடங்கியது. அப்போது குமாரி ஷீபா ரயிலில் ஏற முயன்றுள்ளார், அப்போது அவர் தடுமாறி கீழே விழுந்து ரயிலில் அடிபட்டு பரிதாபமாக மரணம் அடைந்தார். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.