குமரியில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்.

607பார்த்தது
குமரியில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் IPS அவர்கள் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் இன்று 03-01-2024 மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. பொதுமக்களின் குறைகளை கேட்டு அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்கள். இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்பையா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், குளச்சல் உட்கோட்ட
உதவி காவல் கண்காணிப்பாளர் கம்பம் சாமுவேல் பிரவீன் கௌதம் இ. கா. ப, நாகர்கோவில் உட்கோட்ட
உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வி. யாங்சென் டோமா பூடியா இ. கா. ப, கன்னியாகுமரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ் குமார், தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் உதய சூரியன் மற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி