குறும்பனையில் வலிப்பு வந்து மயங்கிய தொழிலாளி பலி

74பார்த்தது
குறும்பனையில் வலிப்பு வந்து மயங்கிய தொழிலாளி பலி
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே குறும்பனை சகாயமாதா தெருவில் கடந்த ஒரு மாதமாக குமரேசன்(50)மற்றும் அவரது மனைவி ஈஸ்வரி (35)ஆகியோர் தங்கி அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்தனர். 2 நாட்களுக்கு முன்பு குமரேசன் வாந்தி எடுத்தார். மருத்துமனைக்கு செல்லாமல் வீட்டில் படுத்திருந்தார். நேற்று அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கினார். உடனே அவரது மனைவி ஈஸ்வரி 108 ஆம்புலன்ஸ் சேவையை அழைத்தார். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து சென்று அவரை பரிசோதனை செய்தனர். அதில் குமரேசன் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். இது குறித்து ஈஸ்வரி குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி