சுதந்திர தினம்: குமரி  ரயில்வே நிலையங்களில்  போலீசார் சோதனை

85பார்த்தது
இந்தியாவின் 78-ம் சுதந்திர தினம் வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.  

      கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளிலும் போலீசார் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில்  ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரயில் தண்டவாளங்கள் மற்றும் ரயில்களில் மெட்டில் டிராக்டர் கருவி மூலம் சோதனை நடத்தினார்கள்.  


       மேலும் ரயில் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டதுடன் வெளியூர்களுக்கு கொண்டு செல்வதற்காக வைக்கப்பட்டிருந்த பார்சல்கள் சோதனை செய்யப்பட்டது. மேலும் ரயில் நிலையத்தில் வெளிப்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்களிலும் ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து ரயில்வே நிலையப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றி தெரியும் நபர்கள் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் ரயில்வே போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி