கொல்லங்கோடு அருகே பிராகோடு பகுதியை சேர்ந்தவர் அனிஷ் குமார் (31) மெக்கானிக். இவருடன் கிராத்தூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (35) என்பவரும் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். சம்பவ தினம் பணி முடிந்து நள்ளிரவு அனீஸ் குமார் ஊரம்பை நோக்கி பைக்கில் சென்றுள்ளார். மணிகண்டன் பின்னால் அமர்ந்திருந்தார்.
கல்வெட்டான்குழி என்ற பகுதியில் செல்லும்போது எதிரே வந்த லோடு ஆட்டோ இவர்கள் சென்ற பைக்கில் மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. ஆட்டோ மோதியதில் அனீஸ் குமார் கால் முட்டி உடைந்து, மார்த்தாண்டத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மணிகண்டனுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக அனீஸ் குமார் கொடுத்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து லோடு ஆட்டோவை தேடி வருகின்றனர்.