மின் இணைப்பு கேட்டு முதியவர் கலெக்டரிடம் புகார்

81பார்த்தது
மின் இணைப்பு கேட்டு முதியவர் கலெக்டரிடம் புகார்
கருங்கல் பகுதியை சேர்ந்தவர் மரிய அந்தோணி. இவர் நேற்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார் அந்த மனுவில் கூறி இருப்பதாவது -
கிள்ளியூர் தாலுகாவுக்கு உட்பட்ட பாலூர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகிறேன். வீட்டிற்கு வரி செலுத்துவதுடன் குடிநீர் இணைப்பும் பெற்று உள்ளேன். ஆனால் தனது வீட்டிற்கு இதுவரை மின் இணைப்பு கிடைக்கவில்லை.
தற்போது மின் இணைப்பு பெற விண்ணப்பித்து அதற்கான தொகை ரூபாய் 5192 ஐ செலுத்திய உள்ளேன். ஆனால் தமிழ்நாடு மின்சார வாரிய கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் எந்தவித முகாந்திரமும் இல்லாமல் தனக்கு மின் இணைப்பு வழங்காமல் தடுத்து வைத்துள்ளார்.
எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து மின் இணைப்பு வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி