விடுமுறையை கழிக்க தென் மாவட்டத்தை நோக்கி செல்லும் மக்கள்

60பார்த்தது
வார விடுமுறையை கழிக்க தென் மாவட்டத்தை நோக்கி செல்லும் மக்கள்.

சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஆமை வேகத்தில் நடைபெறும் ரவுண்டானா அமைக்கும் பணி காரணமாக தேசிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்.!!


சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்கள் மற்றும் முகூர்த்த நாள் என்பதால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களான திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, உள்ளிட்ட பல்வேறு சொந்த ஊர்களுக்கு சென்னையில் இருப்பவர்கள் தங்கள் குடும்பங்களுடன் இருசக்கர வாகனங்களிலும் கார்களிலும் அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளிலும் செல்ல தொடங்கியுள்ளனர்.

சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் கடந்த சில வருடங்களாக ரவுண்டானா அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்ற வருவதால் தற்பொழுது நான்கு வழிச்சாலையை இரண்டு வழிச்சாலையாக சாலையாக முடக்கி உள்ளனர்.

இதன் காரணமாக இந்த சிங்கபெருமாள் கோவில் முதல் மல்ரோசாபுரம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது

சுமார் இரண்டு கிலோமீட்டர் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து செல்கின்றன.!

தொடர்புடைய செய்தி