திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் திமுக வாக்கு சேகரிப்பு

56பார்த்தது
வரும் 19 ஆம் தேதி இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வத்திற்கு ஆதரவாக செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்குட்பட்ட 10 வது வார்டு கவுன்சிலர் தௌலத் பீவி ஏற்பாட்டில் 10 வது வார்டு முழுவதும் பேரூராட்சி மன்ற தலைவர் யுவராஜ் தலைமையில் 300 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்களுடன் பேண்டு வாத்தியங்கள் முழங்க வீடு வீடாக சென்று திமுகவின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கும் படி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் குறிப்பாக திருக்கழுக்குன்றம் பேரூராட்சி பகுதிகளில் 62 கோடி ரூபாய் வரையில் செய்த பல்வேறு வளர்ச்சி பணிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கியும் இதுவரையில் செய்த வளர்ச்சி பணிகளை எடுத்துக் கூறியும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர் பிரச்சாரத்தின் போது திமுக கிளை செயலாளர் டி ஏ ஷரீப் நிர்வாகிகள் அகமது பாஷா , பாருக் ஜெகதீஷ் மற்றும் பேரூர் விஜயன் பழக்கடை வேதகிரி இளங்கோ செங்குட்டுவன் உள்ளிட்டோருடன் இந்தியா கூட்டணியை சேர்ந்த அனைத்து கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி