வெதகிரீஸ்வரர் திருக்கோயில் கிரிவல பாதையில் குவிந்த பக்தர்கள்

77பார்த்தது
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருக்கழுக்குன்றம் வெதகிரீஸ்வரர் திருக்கோயில் கிரிவல பாதையில் குவிந்த பக்தர்கள் கழுகுமலை சுற்றி வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்


செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஸ்தலமாக விளங்கும் ஸ்ரீ வேதகிரீஸ்வரர் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி தினமான இன்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர் கிரிவலப் பாதையை சுற்றி வரும் பக்தர்களுக்கு இளைப்பாற ஆங்காங்கே நீர்மோர் போன்ற குளிர்பானங்களும் அன்னதானமும் வழங்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் திருக்கழுக்குன்றத்தில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது அதனை சரி செய்யும் வகையில் திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் நடராஜ் தலைமையில் போக்குவரத்தை சரி செய்ததுடன் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி