கிராவல் மண் திருட்டு 5 பேருக்கு 'காப்பு'

74பார்த்தது
கிராவல் மண் திருட்டு 5 பேருக்கு 'காப்பு'
காஞ்சிபுரம் மாவட்டம்
ஸ்ரீபெரும்புதுார் அருகே, இரவு நேரங்களில் அனுமதியின்றி கிராவல் மண் எடுத்த, மூன்று லாரி மற்றும் இரண்டு ஜே. சி. பி. , யை பறிமுதல் செய்த போலீசார், ஐந்து பேரை கைது செய்தனர்.

ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட, போந்துார் கிராமம் அருகே, இரவு நேரங்களில், காலி மனைகளில் கிராவல் மண் திருட்டு நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் படி, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் நேற்று இரவு, சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது, அங்கு அனுமதியின்றி கிராவல் மண் எடுத்த, மூன்று லாரி மற்றும் இரண்டு ஜே. சி. பி. , யை போலீசார் பறிமுதல் செய்து, போலீஸ் நிலையம் எடுத்து வந்தனர். மேலும் திருட்டில் ஈடுபட்ட லாரி மற்றும் ஜே. சி. பி. , வாகன ஓட்டிகளை கைது செய்து செய்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களின் கிராவல் மண் திருடி, சிப்காட் பகுதிகளில் புதியதாக கட்டப்படும், தனியார் தொழிற்சாலை கட்டுமானத்திற்கு விற்க மண் திருடப்பட்டதாகவும், மேலும், தலைமறைவாக உள்ள, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி