சாலையில் திடீர் பள்ளம்; வாகன விபத்து அபாயம்

547பார்த்தது
சாலையில் திடீர் பள்ளம்; வாகன விபத்து அபாயம்
காஞ்சிபுரம் அடுத்த, பரந்துார் - பொன்னேரிக்கரை வரையில், 8. 2 கி. மீ. , துாரம் உள்ளது. இந்த சாலை, 5 கோடி ரூபாய் செலவில், கடந்த ஆண்டு ஆண்டு, 5. 5 மீட்டர் அகலத்தில் இருந்து, 1. 5 மீட்டர் கூடுதலாக விரிவுபடுத்தி, 7 மீட்டர் அகல அளவிற்கு சாலை விரிவுப்படுத்த உள்ளது.

இதில், 14 இடங்களில் தரைப்பாலங்கள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளன. சிறுவாக்கம் அருகே, தரைப்பாலத்தின் தடுப்பு சுவரில், சமீபத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஏனாத்துார் ஏரி அருகே, காரை பகுதியில் சாலை நடுவே திடீரென பள்ளம் உருவாகி உள்ளது. இந்த பள்ளத்தில் வாகனங்கள் செல்லும் போது, நிலை தடுமாறி கவிழும் நிலை உள்ளது.

எனவே, சாலை நடுவே ஏற்பட்டு இருக்கும் பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது. "

தொடர்புடைய செய்தி