கள்ளச்சாராயம் அருந்திய மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதி

67பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே மழுவங்கரனை பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த தேவன் என்பவர் அவருக்கு சொந்தமான விளை நிலத்தில் மரக்கட்டையில் இருந்து கரி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார் இதில் அன்றாட பணி புரியும் கூலி தொழிலாளர்களுக்கு பணி முடிந்தவுடன் சாராயம் வழங்கி வந்துள்ளார் இவர் அவரது நிலத்தில் சாராயம் காய்ச்ச மூலப்பொருளான ஊரல் போட்டு அதனை காய்ச்சி அவர் நிலத்தில் பணி புரியும் கூலி ஆட்களுக்கு சாராயம் வழங்கி வந்துள்ளார் இது நேற்று போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் அங்கு சென்ற மதுராந்தகம் மதுவிலக்கு போலீசார் ஆய்வு செய்ததில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 லிட்டர் ஊரல் 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து சாராயம் காய்ச்சிய தேவன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் இந்த நிலையில்
இந்த சாராயம் அருந்திய குறும்பரை பகுதியைச் சேர்ந்த அய்யனார் பெருமாள் மணி ஆகியோர் நேற்று சுகாதாரத்துறையினர் அவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்த நிலையில் மேலும் இந்த சாராயம் குடித்த குறும்பிரை பகுதி சேர்ந்த மதுரை ராதாகிருஷ்ணன் ஆகியோரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளனர் தற்பொழுது 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் இவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி