செய்யூர் தொகுதி காலை உணவு திட்டம் விரிவுபடுத்தும் நிகழ்ச்சி

78பார்த்தது
செய்யூர் தொகுதி காலை உணவு திட்டம் விரிவுபடுத்தும் நிகழ்ச்சி செய்யூர் எம்எல்ஏ பனையூர் மு. பாபு பங்கேற்பு!

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதியில் உள்ள இலத்தூர் ஊராட்சி ஒன்றியம் நெல்வாய் பாளையம், பவுஞ்சூர், விழுதமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தும் நிகழ்ச்சி ஒன்றிய பெருந்தலைவர் சாந்திராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு தொடங்கி வைத்து மாணவ மாணவிகளுடன் உணவு அருந்தினார்.
அந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் பொதுமக்கள் கலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி