செய்யூர் தொகுதியில் நான் முதல்வன் திட்ட முகாம்

83பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செய்யூர் மற்றும் கீழ் மருவத்தூர் பகுதிகளில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் மனு வாங்கும் நிகழ்ச்சி செய்யூர் வட்டாட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு பாபு டெப்டி கலெக்டர் ராஜன் பாபு ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து பல்வேறு மனுக்களை பெற்றுக்கொண்டனர்.

மனுக்களை பெற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு நீங்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி