மறைமலைநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

52பார்த்தது
தென் மாவட்டத்திலிருந்து சென்னையை நோக்கி
ஒரே நேரத்தில் மக்கள் படை எடுத்து வருவதால் சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

2024 நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெற்றது.
இதன் காரணமாக வாக்குப்பதிவு செய்வதற்கு சென்னையில் பணிபுரியும் வசிக்கும் தென் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் சென்றுள்ளனர்.
அதேபோல தொடர் விடுமுறையும் கொண்டாடுவதற்கு சென்னையிலிருந்து மக்கள் தென் மாவட்டத்திற்கு சென்றனர்.

தற்போது பணிக்கு மற்றும் பள்ளி கல்லூரி செல்வதற்கு தென் மாவட்டத்திற்கு சென்ற மக்கள் அனைவரும்
ஒரே நேரத்தில் சென்னை திரும்பி வருவதால் சென்னை புறநகர் பகுதிகளான சிங்கப்பெருமாள் கோவில் மறைமலைநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது

குறிப்பாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை சுமார் ஐந்து கிலோ மீட்டர் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது
அனைத்து வாகனங்களுமே ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கிறது.

தொடர்புடைய செய்தி