தண்ணீர் பந்தல் விழாவில் தீ விபத்து

80பார்த்தது
தண்ணீர் பந்தல் விழாவில் தீ விபத்து
தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில், பட்டாசு வெடித்துச் சிதறி, லேசான தீ விபத்து ஏற்பட்டது.

குன்றத்துார் அருகே கொளப்பாக்கம், கெருகம்பாக்கம் பகுதிகளில், அ. தி. மு. க. , சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா, நடந்தது. சென்னை புறநகர் மாவட்ட செயலர் கந்தன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.

கெருகம்பாக்கத்தில் திறப்பு விழா நடந்த போது, வரவேற்பு அளித்து பட்டாசு வெடிக்கப்பட்டது.

அப்போது, துணியால் அமைக்கப்பட்ட பந்தல் மீது தீப்பொறி பட்டு, தீப்பற்றி எரிந்தது.

இதைப் பார்த்த அ. தி. மு. க. , வினர், தண்ணீரை ஊற்றி உடனடியாக தீயை அணைத்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தீ ஆரம்பத்திலேயே அணைக்கப்பட்டதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி