கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்- மேலும் ஒருவர் கைது

77பார்த்தது
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்- மேலும் ஒருவர் கைது
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வேலு என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள வேலு, மாதேஷிடம் விஷ சாராயம் வாங்கி சேஷசமுத்திரம் பகுதியில் விற்பனை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் இதுவரை மொத்தம் 22 நபர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி