ஒன்றிய துணை சேர்மனை கண்டித்து ஆர்ப்பாட்டம்

76பார்த்தது
ஒன்றிய துணை சேர்மனை கண்டித்து ஆர்ப்பாட்டம்
உளுந்தூர்பேட்டை ஒன்றிய துணை சேர்மனை கண்டித்து பி. டி. ஓ. , அலுவலக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி. டி. ஓ. , வாக பணிபுரிந்து வருபவர் ஜெயராமன். இவரது அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் சென்ற ஒன்றிய துணை சேர்மன் அலெக்சாண்டர், ரூபாய் 38லட்சம் மதிப்பிலான கழிவறை கட்டடம் கட்டுவதற்கான பணியை என்னை கேட்காமல் விடக்கூடாது என கூறியுள்ளார்.


இதனால் பி. டி. ஓ. , ஜெயராமனுக்கும், துணை சேர்மன் அலெக்சாண்டிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பி. டி. ஓ. , ஜெயராமனை துணை சேர்மன் அலெக்சாண்டர் ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. துணைச் சேர்மனின் இப்போக்கை கண்டித்து பி. டி. ஓ. , அலுவலகத்தில் பணிபுரிந்த அலுவலர்கள் நேற்று காலை 11 மணி அளவில் பி. டி. ஓ. , அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்திற்கு பின்பு அனைவரும் கலைந்து சென்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you