
கள்ளக்குறிச்சி: எஸ். பி. அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்
பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல் நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் திருப்தி பெறாத புகார்தாரர்களுக்கான குறைதீர் கூட்டம், எஸ். பி. , அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், எஸ். பி. ரஜத்சதுர்வேதி தலைமை தாங்கி, மனுதாரர்களை நேரில் அழைத்து மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். இதில், 40 மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். ஏ. டி. எஸ். பி. , சரவணன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.