அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட புரட்சி பாரதம் கட்சியினர்

84பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம் கர்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த நபர்கள் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் இறந்ததை அறிந்த புரட்சி பாரத கட்சியின் தலைவர் டாக்டர் பூவை. எம் ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ அவர்கள் நேற்று கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்த குடும்பத்தை நேரில் சந்தித்து இறந்தவர்களின் உடலுக்கு மரியாதை செலுத்தி ஆறுதல் கூறிவிட்டு பிறகு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வருவதை மருத்துவரிடம் விசாரித்து தீவிர சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார் இதை அடுத்து திமுக அரசை கண்டித்து பதவி விலக வேண்டும் என்று புரட்சி பாரதம் கட்சியினர் 400க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவமனையை முற்றுகையிட்டு புரட்சி பாரதம் கட்சியினர் திமுக அரசை பதவி விலக கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி